×

திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி, காமராஜர் சிலை அருகில் திமுக நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகரச் செயலாளர், நகரமன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகர நிர்வாகிகள் கமலக் கண்ணன், ரவி, பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், குப்பன், சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் அருணா ஜெய்கிருஷ்ணா, வசந்தி வேலாயுதம், பிரபாகரன், அயூப்அலி, ஹேமலதா நரேஷ், தனலட்சுமி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA ,Thiruvallur ,Kamaraj statue ,council ,president ,Udayamalar Pandian ,city secretary ,city council ,vice president ,Ravichandran ,Kamalak Kannan ,Ravi ,Parasuraman ,Water Pandal ,
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை...